தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஷங்கர் இயக்கி வரும் 'எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படத்தின் வேலைகள் பரபப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் '2.0' படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் 45 நாட்கள் படமாக்கப்பட்டன. இதில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உட்பட படத்தின் மற்ற வில்லன் நடிகர்களும் கலந்து கொண்டனர். ரோபாவாக அக்ஷய்குமார் வித்தியாசமான தோற்றத்திலிருந்த புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.
இந்நிலையில் 2.0 படத்துக்கான 3-வது ஷெட்யூல் மே மாதம் முதல் வாரம் தொடங்குகிறது. சென்னை பூந்தமல்லியிலுள்ள மூடப்பட்டு கிடக்கும் தீம் பார்க் ஒன்றில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு புலி படத்துக்காக செட் போடப்பட்ட ஈசிஆரில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து, படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகளை படமாக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர்.
'கபாலி' வேலைகள் முழுவதையும் ரஜினி முடிந்துக் கொடுத்துவிட்டார். எனவே, இனி முழுமூச்சாக '2.0' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் ரஜினி.