'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சில இயக்குனர்கள் தங்களது படங்களின் (சீப்) பப்ளிசிட்டிக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்குவார்கள்.. கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழில் வெளிவந்த 'ராஜா ராணி' படத்திற்கு பப்ளிசிட்டி செய்வதற்காக, ஆர்யா-நயன்தாரா இருவரும் (படத்தில்) திருமண கோலத்தில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு, இருவரும் திருமணம் செய்துகொண்டதாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்கள் அல்லவா..? இதேபோலத்தான் கடந்த மாதம் மலையாள சினிமாவிலும் ஒரு முத்தச்சி கத' என்கிற படக்குழுவினரும் சீப் பப்ளிசிட்டியில் இறங்கினர்.
இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகர், பிரம்மச்சாரியான உன்னி முகுந்தன், படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை சனுஷாவை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார் என்கிற செய்தி அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படத்துடன் பரவ ஆரம்பித்தது.. அப்போதைக்கு உன்னிமுகுந்தன் அந்த போட்டோ மற்றும் பொய்யான செய்தி குறித்து மறுப்பு கூறியிருந்தார். இப்போது நாயகி சனுஷாவும், “நான் இப்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன்.. மேலும் தொடர்ந்து படித்தும் வருகிறேன்.. இப்போதைக்கு திருமணம் செய்துகொள்வது பற்றிய எண்ணமே இல்லை. படக்குழுவினர் இந்த மாதிரி சீப் பப்ளிசிட்டியில் இறங்குவார்கள் என நான் நினைக்கவே இல்லை” என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்..