தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அழகும், திறமையும் இருந்து வாய்ப்பில்லாத நடிகைகளில் ஒருவர் நிகிஷா பட்டேல். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த நிகிஷா 'என்னமோ ஏதோ' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதே படத்தில் நடித்த ரகுல் பிரீத்தி சிங் தற்போது தெலுங்கில் டாப் ஹீரோயின். ஆனால் நிகஷா பின் வரிசையில் நிற்கிறார்.
அரசியல் பிரமுகர் பாஸ்கரன் நடித்த தலைவன் படத்தில் நடித்தது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு கன்னட படங்களில் நடிக்கச் சென்று விட்டார். நிகிஷா நடிப்பில் கன்னடம் தமிழில் உருவான கரையோரம் படம் வந்த சுவடு தெரியாமல் சென்று விட்டது. அந்தப் படத்தை பெரிதாக நம்பி கவர்ச்சியாகவும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள 'நாரதன்' படம் இன்று வெளியாகி உள்ளது. நிகிஷா தலைவன் படம் தவிர வேறெந்த தமிழ் படத்திலும் சோலோ ஹீரோயினாக நடித்தில்லை. நாரதன் படத்திலும் இன்னொரு ஹீரோயின் இருக்கிறார். நாரதர் படத்தில் நகுல் ஹீரோ. சென்னை வரும் நகுல் நிகிஷாவுக்கு உதவபோய் சிக்கலில் மாட்டும் காமெடி கதை. இன்னொரு ஹீரோயின் இருந்தாலும் நிகிஷாவுக்கு அதிக ஸ்கோப் உள்ள படம். இந்த படம் தனக்கு எப்படியும் ஒரு நல்ல இடத்தை பிடித்து தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நிகிஷா.