தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நிச்சயமாக ஜீத்து ஜோசப் தற்சமயம் பிஸியாகத்தான் இயங்கி கொண்டிருக்கிறார்.. ஆம்.. பிருத்விராஜை வைத்து 'ஊழம்' என்கிற படத்தை இயக்கிவருகிறார். 'மெமொரீஸ்' என்கிற ஹிட் படத்திற்கு பிறகு பிருத்விராஜுடன் இணைந்து பணியாற்றும் இந்தப்படம் பழிவாங்குவது தொடர்பான கதையாம்.. இதற்கான வேலைகளில் இருக்கும்போது பிஜூமேனன் - இந்திரஜித் இருவரும் நடிக்கும் படத்திற்கு கதை எழுத அவருக்கு நேரம் இருக்கிறதா..? அப்படியே இருந்தாலும் யாருக்காக ஒப்புக்கொண்டார் என்பது அவரது நட்பு வட்டாரத்திலேயே மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது..
வேறு யாருக்காகவும் இல்லை.. அவரது நண்பரான அன்சார் கான் என்பவருக்கத்தான் இந்த கதையை எழுதிகிறார்.. அறிமுக இயக்குனராக களம் இறங்கும் அன்சார் கான் ஏற்கனவே இயக்குனர்கள் விஜிதம்பி மற்றும் பிளஸ்சி ஆகியோரிடம் உதவியாளராக வேலைபார்த்தவர்தான். இவரிடம் பிஜூ மேனன் மற்றும் இந்திரஜித் ஆகியோரின் கால்ஷீட் கிடைக்கவே, தான் ஏற்கனவே இயக்கிய குறும்படமான 'முகமுகம்' கதையை ஜீத்துவிடம் கொடுத்து, அதை படத்திற்கான கதையாக மாற்றித்தரும்படி சொல்லியிருக்கிறார்.. கேரளாவில் வண்டிப்பெரியார் அறுகில் உள்ள பீர்மேடு பகுதியில் இருந்து எர்ணாகுளத்திற்கு காட்டுப்பாதை வழியாக தப்பிக்கும் இரண்டு குற்றவாளிகளை பற்றிய கதைதான் இது. நண்பர் என்பதால் ஜீத்து ஜோசப்பும் எழுதித்தர சம்மதித்து விட்டாராம்.