ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என பல படங்களில் நடித்த நகுல், அதையடுத்து நாரதன் என்ற படத்தில் நடித்தார். நாகா வெங்கடேஷ் இயக்கிய அப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் நடித்தார். பிரேம்ஜியும் இன்னொரு ஹீரோ போன்ற வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே நடந்து முடிந்து விட்டது. ஆனால் படம் ரிலீசாக முடியாமல் இருந்து வந்தது.
இதற்கு காரணம் நகுலுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. அதனால் பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது நகுலின் சம்பள பிரச்சினை உள்பட நாரதன் படம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விட்டதாம். அதனால் படம் விரைவில் திரைக்கு வருகிறது என்கிறார்கள். மேலும், தனது திருமணத்திற்கு பிறகும் வெளியாகும் படம் என்பதால் இந்த படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நகுல் எதிர்பார்க்கிறாராம்.