இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகில் எப்போதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு. ஒரு படம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளி வரும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, அந்த தேதியில் வெளியாகாமல் போய்விட்டால், அந்தப் படம் தோல்விப் படங்களின் பட்டியலில்தான் போய்ச் சேரும். அபூர்வமாக ஒரு சில படங்கள் மட்டுமே கொஞ்சும் சுமாரான வெற்றியைப் பெறும். ஆனால், ஒரு படம் இரண்டு முறை வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு, அந்த இரண்டு முறையும் பல காரணங்களால் வெளியாகாமல், தள்ளித் தள்ளி வெளியாகி 50வது நாளைத் தொட்டுள்ளது. அந்தப் படம் 'ரஜினி முருகன்' தான் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
2015ல் செப்டம்பர் 17 விநாயக சதுர்த்தியன்று வெளிவருவதாக பிரமாதமாக விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், கடைசி நேர நிதிச் சிக்கலால் அன்று படம் வெளியாகாமல் போனது. அதன் பிறகு பல பஞ்சயாத்துக்கள் நடந்தன. கடைசியாக டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். மழை, வெள்ளம் காரணமாக அன்றும் படம் வெளிவராமல் போக, கடைசியாக இந்த வருடப் பொங்கலல் தேதியான ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். இருந்தாலும் கடைசி வரை படம் வெளிவருமா என்பதைப் பற்றி கோலிவுட்டில் சந்தேகப் பார்வை இருந்து கொண்டேதான் இருந்தது. ஒரு வழியாக மூன்றாவதாக சொன்ன தேதியில் படமும் வெளிவந்து மிகப் பெரிய வசூலைக் குவித்தது.
'வேதாளம்' படத்திற்குப் பிறகு அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்த படமாக 'ரஜினி முருகன்' இருந்தது என்ற அனைவரும் ஒரே மாதிரி சொன்னார்கள். அப்படியே அந்த நிறுவனத் தயாரிப்பில் முடங்கிக் கிடக்கும் 'இடம் பொருள் ஏவல்' படம் வந்துவிடாதா என அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்களாம். 'ரஜினி முருகன்' வசூலில் கிடைத்த 'பொருள்', 'இடம் பொருள் ஏவல்' படத்தை வெளியேற்றி விடாதா என்ற ஒரு எண்ணம்தான் என்கிறார்கள்.