ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
தமிழ்த் திரையுலகில் நம்பிக்கை தரும் நடிகர்களாக சிலர் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 'கணிதன்' அதர்வா, 'ஆறாது சினம்' அருள்நிதி இருவரும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களாக இருப்பது அவர்களது படத் தேர்வுகளில் இருந்து தெரிகிறது. வெற்றி என்பது இன்று வரும் போகும், ஆனால் நல்ல படம் என்பது தான் ஒருவரை ஞாபகம் வைத்திருக்கும். அதர்வாவும், அருள்நிதியும் அப்படி ஒரு ஞாபகத்தை வைத்துக் கொள்ளும் நடிகர்களாக வருவார்கள் என திரையுலக வட்டாரங்களிலேயே நேற்று முதல் ஒரு பேச்சு எழுந்துள்ளது.
அதர்வா நடித்த 'கணிதன்' படம் நேற்றைய முதல் நாள் வசூலில் முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், வரவேற்பைப் பொறுத்தவரையில் 'கணிதன்' படத்தை விட அருள்நிதி நடித்துள்ள 'ஆறாது சினம்' கொஞ்சம் முன்னே செல்கிறது என்கிறார்கள். இந்த இரண்டு படங்களை இயக்கியவர்களும் தமிழ் சினிமாவின் பிரபலமான முக்கிய இயக்குனர்களிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களும் வழக்கமான மசாலா, ஆக்ஷன் படங்களிலிருந்து வித்தியாசப்பட்டிருப்பதாகவே ரசிகர்களும் தெரிவிக்கிறார்கள். அதே சமயம், இரண்டு படங்களிலும் சில தொய்வான காட்சிகள் இருப்பது படத்திற்கு வேகத் தடையாக உள்ளது என்பதும் ஒருமித்த கருத்தாகவே உள்ளது.
'நையப்புடை' என்ற அருமையான தலைப்பை பா.விஜய்யும், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் வீணாக்கி விட்டார்கள் என்பதே உண்மை.