ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
படங்களை வாங்கி வெளியிடுவதில் முன்னணியில் உள்ள ராமநாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அவ்வப்போது படங்களையும் தயாரித்து வருகிறது.
அருள்நிதி நடித்த டிமான்ட்டி காலனி படத்தைத் தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து தற்போது ஆறாது சினம் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்திலும் அருள்நிதியே கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாரவி, துளசி, ரோபோசங்கர், ஜஸ்வர்யா தத்தா, சார்லி, ஆர்.என்.ஆர். மனோகர், அனுபமாகுமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற மெமரீஸ் படத்தின் ரீமேக்கான இப்படத்தை அறிவழகன் இயக்கி உள்ளார். ப்ருத்வி ராஜ் நடித்த மெமரீஸ் படத்தை த்ரிஷ்யம் பட இயக்குநரான ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். நகரில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலையை துப்பறிய காவல்துறை அதிகாரியை நியமிக்கிறது அரசு.
அந்த காவல்துறை அதிகாரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை காரர்கள் தொல்லை கொடுக்கின்றனர். அவற்றை மீறி காவல் துறை அதிகாரி கொலைகாரர்களை கைது செய்தாரா? அவரது குடும்பம் என்னவானது? வென்றது யார்? என்பதுதான் ஆறாதுசினம் படத்தின் கதை.
காவல்துறை அதிகாரியாக அருள்நிதி நடித்திருக்கிறார். ஆறாது சினம் இன்று தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆறாது சினம் பிப்ரவரி 26 அன்று வெளியாகிறது.