ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடித்துள்ள பேய் படம் 'சவுகார் பேட்டை'. வி.சி.வடிவுடையான் இயக்கி உள்ளார், சாலோம் ஸ்டூடியோ சார்பில் ஜான்மேக்ஸ் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 26ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சவுகார்பேட்டை டைட்டில் என்னுடையது என்று கூறி படத்துக்கு தடைகேட்டு சங்கர் என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சவுகார்பேட்டை என்ற பெயரில் நான் படம் தயாரித்து வருகிறேன். படத்தின் தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்திருக்கிறேன். இந்த நிலையில் எனது படத்தின் தலைப்பில் என் அனுமதி இல்லாமலேயே ஜான்மேக்ஸ் என்பவர் படம் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 26ந் தேதி வெளிவர இருப்பதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்தப் படம் வெளிவந்தால் எனக்கு பெரிய இழப்பு ஏற்படும். எனவே சவுகார்பேட்டை படத்தை தடைசெய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம். இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தயாரிப்பாளர் ஜான்மேக்சுக்கு உத்தரவிட்டு வழகை வருகிற 16ந் தேதிக்கு தள்ளி வைத்தது.