கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சித்தார்த் தயாரித்து நாயகனாக நடித்த 'ஜில் ஜங் ஜக்', விமல், பசுபதி, நந்திதா நடித்துள்ள 'அஞ்சல', ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், சிருஷ்டி டாங்கே, சாந்தினி, சம்ஸ்க்ருதி மற்றும் பலர் நடித்துள்ள 'வில் அம்பு', மற்றும் 'இரண்டு மனம் வேண்டும், வெண்ணிலாவின் அரங்கேற்றம்' ஆகிய படங்கள் நேற்று வெளியாகின.
முன்னணி ஹீரோக்கள் இல்லாத ரசிகர்களை தியேட்டர்களுக்கு அதிகம் ஈர்க்காத நாயகர்கள் நடித்த படங்கள்தான் நேற்று வெளியாகின. அனைவருமே தங்களது படத்தின் கதையை நம்பித்தான் களம் இறங்கியிருக்கிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் யார் நடித்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பார்க்கப் போவதில்லை என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம்.
'ஜில் ஜங் ஜக்' படம் கண்டிப்பாக பி அன்ட் சி பக்கம் எடுபடாமல் போய்விடும். மல்டிபிளக்ஸ் பக்கம் வேண்டுமானால் ஓடும். புதுமையாக சிந்திக்கிறேன் என்று சொல்லி கொஞ்சம் ஆர்வக் கோளாறுடன் பலர் கோலிவுட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் இந்தப் படத்தின் இயக்குனர் தெரிகிறார்.
'அஞ்சல' என்றதும் படத்தின் நாயகி பற்றிய கதை இது என நினைக்க வேண்டாம். 'அஞ்சல' என்பது ஒரு டீக்கடையின் பெயர். படத்தின் நாயகன் விமலா, பசுபதியா என்ற கேள்வி படம் பார்க்கும் போது எழும். இன்னும் எத்தனை படத்தில்தான் விமல் ஒரே மாதிரியாக நடித்துக் கொண்டிருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.
'வில் அம்பு' படம் வித்தியாசமான கதையம்சத்துடன் உள்ளது. படத்தில் இரண்டு வளரும் ஹீரோக்கள் நடித்திருக்கிறார்கள். அதில் இரண்டு பெரிய ஹீரோக்கள் நடித்திருந்தால் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும்.
மற்ற இரண்டு படங்களான 'இரண்டு மனம் வேண்டும், வெண்ணிலாவின் அரங்கேற்றம்' ஆகிய படங்களை ரசிகர்கள் கண்டு கொள்வார்களா என்பது சந்தேகமே.
ஆக, நேற்று வெளியான படங்களில் எந்தப் படமும் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தையும், வியாபார ரீதியாக வசூலையும் அள்ளுவதற்கு வாய்ப்பில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.