தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பார்ட் -2 எடுப்பது தற்போது சீசனாக மாறி வருகிறது. தோல்விப்படம் கொடுத்ததால் தற்போது துவண்டுபோயிருக்கும் இயக்குநர்கள் இந்த சீசனை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். அதாவது, பல வருடங்களுக்கு முன் தான் இயக்கிய வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நினைக்கின்றனர். அஞ்சான் தோல்விக்குப் பிறகு எழமுடியாத நிலையில் இருக்கும் லிங்குசாமி தன்னுடைய கடந்த கால வெற்றிப்படமான சண்டைக்கோழியின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய அடுத்தப் படமாக பிரபுசாலமன் இயக்க உள்ளார்.
இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகத்தை இயக்க இருப்பதாக அறவித்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். சிம்பு, த்ரிஷா, வி.டி.வி.கணேஷ் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கெளதம் மேனன் இயக்கிய இப்படத்தை இளைஞர்கள் கொண்டாடினர். குறிப்பாக, காதலர்கள் மத்தியில் மிகவும் ரசிக்கப்பட்ட படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு தற்போது வரை வரவேற்பு இருக்கிறது. இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் சினிமாஸில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை திரையிட இருக்கிறார்கள்.
இந்நிலையில், 'விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகத்தில் 4 நாயகர்கள் இருப்பார்கள், அதில் சிம்பு ஒருவராக இருப்பார். டிசம்பர் மாதம் முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். அப்படத்தில் கார்த்தி மறுபடியும் ஜெஸ்ஸியை 7 ஆண்டுகள் கழித்து சந்திப்பது தான் கதைக்களமாக இருக்கும்" என்று விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகம் குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார் கெளதம் மேனன்.