ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜமெளலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி கடந்த வருடம் வெளிவந்து சாதனை புரிந்த படம் 'பாகுபலி'. உலகம் முழுவதும் சுமார் 600 கோடி ரூபாய்க்கும் மேல் இப்படம் வசூல் சாதனை புரிந்தது. அதையடுத்து படத்தை உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் கொண்டு சேர்க்கும் விதத்தில் இப்படத்தைத் தயாரித்த நிறுவனம் தனி பிரிவு ஒன்றைத் துவக்கியது. அதன் தொடர்ச்சியாக சில திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட 'பாகுபலி' திரைப்படம் உலகத் திரைப்பட முதலீட்டாளர்களை ஈர்த்தது. இதுவரை வெளியாகாத பல நாடுகளில் இப்படத்தை வெளியிடும் வேலைகள் ஆரம்பமாகி நடந்து வந்தன.
தற்போது படத்தை சீனாவில் சுமார் 6000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வருடம் மே மாதம் 'பாகுபலி' படம் அங்கு திரையிடப்படும் எனத் தெரிகிறது. கடந்த வருட மே மாதம் அமீர்கான் நடித்த 'பிகே' படம் சீனாவில் 5000 தியேட்டர்களில் வெளியானது. சுமார் 200 கோடி ரூபாய் வசூலித்ததாகத் தகவல்கள் வெளியானது.
'பாகுபலி' படம் 6000 தியேட்டர்களில் வெளியாவதால் 'பிகே' படம் வசூலித்ததை விட அதிகம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி' போன்ற அரச கதைகள் சீன ரசிகர்களையும் வெகுவாகக் கவரும் அம்சம் என பலரும் கூறி வருகிறார்கள். சீனா திரையுலகத்திலும் அரச கதைகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.
சீனாவை அடுத்து ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளிலும் 'பாகுபலி' படத்தை வெளியிட உள்ளார்களாம். அதனால் படத்தின் மொத்த வசூல் 1000 கோடியைத் தாண்டவும் வாய்ப்புள்ளது.