ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
ரஜினி நடித்த லிங்கா' படத்துக்கு ஏற்பட்ட தோல்வியை விட அதனால் எழுந்த பிரச்னைகள் காரணமாக இனி தமிழ்ப்படமே வேண்டாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டார் கே.எஸ்.ரவிக்குமார். அதன் பிறகு சற்றே மீண்ட அவர் தற்போது சுதீப் நடிக்கும் கன்னடப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் 'முடிஞ்சா இவனப் புடி' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. சுதீப்புக்கு ஜோடியாக நித்யா மேனன் இப்படதில் நடிக்கிறார்.
'லிங்கா' படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷும், எம்.பி.பாபு இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தெறி' படம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனால் 'தெறி'க்கு முன்பாக 'முடிஞ்சா இவனைப் புடி' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கே.எஸ்.ரவிகுமார் விரும்புகிறாராம். எனவே இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை மிக விரைவில் வெளியிடவிருக்கிறார்கள்.