தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தங்கமகன் படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மிரட்டு' படத்தில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ். மிரட்டு படப்பிடிப்பு முடிந்ததும், தற்போது ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கி வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா, ஷாம்லி என இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ஷாம்லியின் கால்ஷீட்டில் நிறைய குளறுபடி இருந்ததினால் அவரை நீக்கச் சொல்லிவிட்டாராம் தனுஷ். அவருக்குப் பதில், தற்போது 'பிரேமம்' மடோனா செபாஸ்டியன் இன்னொரு நாயகியாக நடிக்க இருக்கிறார்.
கொடி படத்தை முடித்த கையோடு வெற்றி மாறன் இயக்கத்தில் 'வடசென்னை' படத்தின் படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லி வந்தார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் துவங்கும் என்றும் சொன்னார். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆன்ட்ரியா ஆகியோர் நடிப்பதாகவும், இது இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் புதிய தகவலாக.. வட சென்னை படத்தை மீண்டும் ஒத்தி வைத்துவிட்டதாக திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள். அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புப்கொண்டிருக்கிறார். 'என்மேல் பாயும் தோட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறதாம். அதாவது வட சென்னை துவங்க வேண்டிய நேரத்தில்.