சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். நடிகை தேவயானியின் கணவரான இவர், திருமதி தமிழ் படத்தில் நாயகனாகவும் நடித்தார். பின்னர் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் காமெடியனாக நடித்தார். அதைத் தொடர்ந்து இப்போது கோலிசோடா விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில், ராஜகுமாரனை தொடர்பு கொண்டு விஜய்மில்டன் படத்தில் எந்த மாதிரியான ஹீரோவாக நடிக்கிறீர்கள்? என்று கேட்டால், விஜய் மில்டன் படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். மற்றபடி அது எந்த மாதிரியான ரோல், எந்தமாதிரியான படம் என்பது பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். எதுவாக இருந்தாலும் டைரக்டரைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்கிறார்.
மேலும், நான் டைரக்சன் பண்ணும் படமாக இருந்தால் தைரியமாக சொல்லி விடுவேன். ஆனால் இது நான் நடிக்கிற படம். அதனால் அதைப்பற்றி நான் எதுவும் சொல்லக்கூடாது. சொன்னால் தவறாகி விடும் என்கிறார். அவரிடத்தில், டி.ராஜேந்தர் நடிக்கயிருந்த வேடத்தில் இப்போது நீங்கள் நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்றதற்கு, டி.ஆர் நடிக்கயிருந்த விசயமே நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது என்கிறார் ராஜகுமாரன்.