தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ஜனவரி 14-ந்தேதி வெளியான படம் கதகளி. சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த பாயும்புலி அதிர்ச்சி தோல்வி கொடுத்ததால் இந்த படம் தனக்கு கைகொடுக்கும் என்ற எதிர்பார்த்தார் விஷால். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இருப்பினும், தெலுங்கில் வெற்றி பெறும் என்று நம்புகிறாராம் விஷால்.
மேலும், தமிழில் வெளியான அதே நாளில் ஆந்திராவிலும் வெளியிட வேண்டும் என்று முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால் தியேட்டர் பிரச்சினையால் ஒருவாரம் தள்ளி வைக்க முடிவெடுத்த நிலையில், கடந்த வாரம் அங்கு 4 தெலுங்கு படங்கள் ஒரே நாளில் வெளியானது. அதனால் ரிலீஸ் தேதியை வருகிற 12-ந்தேதிக்கு மாற்றி விட்டார்களாம்.
அதோடு, அப்பட நாயகி கேத்ரின் தெரசாவுக்கு தெலுங்கில் ஒரு ரசிகர் வட்டம் இருப்பதால் அதிகபட்சமாக 300 தியேட்டர்களில் கதகளியை வெளியிடும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். தற்போதைய நிலவரப்படி 210 தியேட்டர்கள் ஓகேவாகி விட்டதாம். அதனால், பிப்ரவரி 12-ந்தேதி கதகளி ஆந்திராவில் வெளியாவது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள்.