விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
சினிமா நட்சத்திரங்களின் பெயரில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் போலியான அக்கவுண்ட்டை ஆரம்பித்து, அவர்களது நிஜ அக்கவுண்ட் என்று மக்களை நம்ப வைப்பதற்கு என்றே ஒரு வட்டம் இருக்கிறது. முன்னணி நட்சத்திரங்களின் பெயர்களில் உள்ள பல கணக்குகள் போலியானவைதான். நடிகர் விஜய்யின் பெயரில் அதாவது ஆக்டர் விஜய் என்ற பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு செயல்படுத்து வந்தது. அந்தப்பெயரில் தான் ஒரு அக்கவுண்ட் தொடங்க நினைத்தார் விஜய். அவரால் அந்தப்பெயரில் தொடங்க முடியவில்லை. கடைசியில் தன் பெயரில் போலி கணக்கு வைத்திருப்பவரை தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து தன் பெயரில் தொடங்கப்பட்ட கணக்கை மீட்டு, தற்போது விஜய் பயன்படுத்தி வருகிறார்.
நடிகர் சூரியின் பெயரில் கூட ட்விட்டரில் ஒரு போலி கணக்கு தொடங்கப்பட்டது. அவர் சைபர் க்ரைமில் புகார் கொடுத்த பிறகு அது முடக்கப்பட்டது. இப்படியொரு நிலைக்கு தற்போது லட்சுமிமேனனும் தள்ளப்பட்டிருக்கிறார். ட்விட்டரில் லட்சுமிமேனன் பெயரில் ஒரு போலியான பக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த ட்விட்டர் பக்கம் தன்னுடையது அல்ல என்று லட்சுமி மேனன் தெரிவித்திருக்கிறார்.
மிருதன் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்தவரிடம் ட்விட்டர் பக்கம் குறித்து கேட்டபோது, "ட்விட்டர் தளத்தில் எனது பெயரில் ஒரு போலியான பக்கம் செயல்பட்டு வருவது உண்மைதான். அதை யார் உபயோகிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. என்னுடைய பக்கம் என்று நம்பி நிறைய திரையுலக பிரபலங்கள் அந்த கணக்கில் வரும் ட்வீட்டுக்கு பதிலளித்து வருகிறார்கள். ட்விட்டரில் இருப்பது நான் அல்ல. அந்த ட்விட்டர் கணக்கை யாரும் பின் தொடர வேண்டாம்.” என்ற லட்சுமி மேனன்,“ எனக்கு ஒரு ஃபேஸ்புக் பக்கம் மட்டுமே இருக்கிறது. அதையுமே நான் எப்போதாவது தான் உபயோகப்படுத்துவேன்" என்றும் தெரிவித்தார்.