மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
விசாரணை' படத்தைப் பார்த்தவர்கள் அந்த கொடுமைக்கார இன்ஸ்பெக்டரை மறக்கவே முடியாது. அப்படி ஒரு கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அஜய் கோஷ். தெலுங்குப் படங்களில் வில்லனாக நடித்தவரை 'விசாரணை' படத்தின் மூலம் தமிழுக்குக் கொண்டு வந்தார் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது ராஜமௌலி இயக்கி வரும் பாகுபலி 2' படத்தில் வழிப்பறிக் கொள்ளைக் காரனாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஜய் கோஷ். கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டனர், அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
விசாரணை பட அனுபவத்தைப் பற்றிப் பேசும் போது, ''வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர். முதல் நாள் காட்சியை படத்தின் இயக்குனருடன் பார்த்தேன், தியேட்டரை விட்டு பயந்து கொண்டே தான் வெளியே வந்தேன். ஆனால் அனைவரும் எனது நடிப்பைப் பாராட்டினார்கள். படத்தில் தினேஷை அடிக்கும் காட்சிகளில் நானே கண் கலங்கிப் போய்விட்டேன். அவரை அடிக்க டம்மியான லத்தி தான் பயன்படுத்தப்பட்டது என்றாலும் அதை வேமாகப் பயன்படுத்தியது வருத்தமாகத்தான் இருந்தது என்கிறார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் வில்லன் பஞ்சத்தை அஜய் கோஷ் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.