ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்தவர் பாபி சிம்ஹா. அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு பாபி சிம்ஹாவின் நடிப்பும் பேசப்பட்டது. இதில் ஜிகர்தண்டாவுக்காக சிறந்த வில்லனுக்கான தேசிய விருதும் பெற்றார். ஆனபோதும், அதையடுத்து அவர் வில்லன் பயணத்தை தொடரவில்லை. உடனடியாக ஹீரோவாகி விட்டார். ரசிகர்கள் தன்னை வில்லனாகத்தான் அங்கீகரித்தார்கள் என்றபோதும், ஹீரோ ஆசையில் பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்படி அவர் நாயகனாக நடித்து வெளியான மசாலாப்படம், உறுமீன், பெங்களூர் நாட்கள் என பல படங்கள் வெளியாகி விட்டன. ஆனால் எந்த படத்திலும் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. இதையடுத்து பாபி சிம்ஹாவின் அபிமானிகள், உங்களுக்கு பாசிட்டீவை விட நெகடீவ் ரோல்கள்தான் நன்றாக ஒர்க்அவுட்டாகிறது. அதனால், ஹீரோவாக நடித்தாலும் நெகடீவ் கலந்த கதைகளில் நடியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்களாம்.
இதுவரை அப்படி நடிப்பது பற்றி யோசிக்காத பாபி சிம்ஹா, இப்போது நெகடீவ் ரோலில் தான் நடித்து பேசப்பட்ட படங்களை அசைபோட்டு பார்த்துக்கொண்டி ருக்கிறாராம். ஆக, விரைவில் பாபி சிம்ஹாவை அதிரடி ஹீரோவாக திரையில் பார்க்கலாம் என்று தெரிகிறது.