பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் அண்ணன் மகன் திலீபன் வத்திக்குச்சி படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது அவர் நடித்து வரும் இரண்டாவது படம் குத்தூசி. அவருக்கு ஜோடியாக புதுமுகம் அமலா அறிமுகமாகிறார். வ.ஜ.ச.ஜெயபாலன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சீனு ராமசாமியின் உதவியாளர் சிவசக்தி இயக்குகிறார். இது விவசாயத்தை மையப்படுத்தும் கதை என்கிறார் சிவசக்தி. மேலும் அவர் கூறியதாவது: நாம் படிக்கவில்லை நம்பிள்ளைகளாது படிக்கட்டும் என்று நமக்கு முந்தைய தலைமுறை தனது வாரிசுகளை விவசாயத்தை விட்டு விரட்டி விட்டது. இப்போது விவசாயம் செய்ய ஆளும் இல்லை, நிலமும் இல்லை. இந்த பிரச்சினை பற்றி பேசும் படம், ஹீரோவின் அப்பா தன் மகனை படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்ப தனது நிலத்தை வெளிநாட்டு கம்பெனிக்கு விற்க ஏற்பாடு செய்கிறார். இந்த நிலையில் அவர் இறந்துவிட ஹீரோவுக்கு இடத்தை விற்று விட்டு வெளிநாடு செல்லவிருப்பம் இல்லை. விற்க மறுக்கிறார். அப்போது தான் வெளிநாட்டு நிறுவனத்தின் சதிவேலைகள் தெரிகிறது. அந்த நிறுவனத்திடமிருந்து ஊரையும், நிலத்தையும், மக்களையும எப்படி ஹீரோ காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
காதல், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் கலந்து ஒரு கமர்ஷியல் படமாக உருவாகி இருந்தாலும் சமூத்துக்கு தேவையான மெசேஜோடு உருவாக்கியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் சிவசக்தி.