அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான 'அரண்மனை 2' படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படமும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருவதால் படத்திற்குக் கூட்டம் வருவதாகச் சொல்கிறார்கள். இதனிடையே படத்தைப் பார்த்த சித்தார்த், படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாததைக் கண்டு கடும் கோபமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதனால்தான் டிவிட்டரில் கூட அவர் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் 'நாகூர் பிரியாணி, உளுந்தூர்பேட்டை தெரு நாய்' வசனத்தைப் போட்டிருந்தார் என்கிறார்கள். அது தனுஷையோ, ரஜினியையோ குறிப்பிடுவதில்லையாம், சுந்தர்.சியைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். பொதுவாக ஒரு படத்தில் கதாநாயகியைக் காப்பாற்றுபவர்தான் கதாநாயகனாக கருதப்படுவார். ஆனால், இந்தப் படத்தில் பேய் பிடித்த த்ரிஷாவை அவருடைய காதலன் சித்தார்த் காப்பாற்றாமல் த்ரிஷாவின் அண்ணனாக நடித்திருக்கும் சுந்தர்.சி தான் காப்பாற்றுவார்.
முதலில் சொன்ன கதையை மாற்றி தனக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் சுந்தர்.சி படத்தை மாற்றி விட்டார் என்பதுதான் சித்தார்த்தின் குற்றச்சாட்டாம். ஆனால், படம் வெற்றி பெற்றதும் தன் எண்ணத்தை சித்தார்த் மாற்றிக் கொண்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் சுந்தர்.சியுடன் கொண்டாடியிருக்கிறார் சித்தார்த்.
ஓ..இதுக்குப் பேருதான் 'ஜில் ஜங் ஜக்'கா....!