இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கதகளி படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய நேற்று முதல் நீக்கப்பட்டு உள்ளது. நடிகர் விஷால், நடிகை கேத்ரின் தெரசா நடித்து, பாண்டிராஜ் இயக்கிய படம், கதகளி. இப்படத்தில், வண்ணார் சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில், காட்சிகள் இடம் பெற்றதாக புகார் எழுந்தது. சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, தமிழ்நாடு வண்ணார் பேரவை பொதுச் செயலர் கே.பி.மணிபாபா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, திரைப்பட தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலுடன், கதகளி படத்தில், வில்லனுடன், விஷால் பேசும் சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்ற காட்சி, நேற்று முதல் நீக்கப்பட்டு உள்ளது.