'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜனவரி 29 நேற்று வெளியான நான்கு திரைப்படங்களில் நிஜமான போட்டி 'இறுதிச் சுற்று, அரண்மனை 2' ஆகிய படங்களுக்கிடையேதான் உள்ளது. மாதவன் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து வெளிவந்துள்ள படம் 'இறுதிச் சுற்று'. 2010ம் ஆண்டு வெளிவந்த 'துரோகி' என்ற தோல்விப் படத்தைக் கொடுத்த பெண் இயக்குனரான சுதா கோங்கரா தான் 'இறுதிச் சுற்று' படத்தை இயக்கியவர். எந்த ஆண் இயக்குனரும் இப்படி ஒரு படத்தை எடுக்கத் தயங்கியிருப்பார்கள் என்றுதான் படத்தைப் பார்த்த பலரும் கூறி வருகிறார்கள்.
அஜித்தும், விஜய்யும் சராசரியான மசாலாப் படங்களில் நடித்து விட்டு தங்களை ஆக்ஷன் ஹீரோக்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால், நிஜமான ஆக்ஷன் ஹீரோ படம் என்றால் இந்தப் படம்தான் என்று பார்த்தவர்கள் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டி வருகிறார்கள். படத்திற்கான வாய் வழிப் பிரச்சாரம் தானாகவே நடந்து கொண்டிருப்பதால் இந்தப் படம் ஏ சென்டர்களைத் தவிர பி அன்ட் சி சென்டர்களிலும் நல்ல வசூலைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
'அரண்மனை' படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'அரண்மனை 2' படத்தை அதே பாணியில் எடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் .சி. முதல் பாகத்தில் நடித்த கோவை சரளா, மனோபாலாவைத் தவிர இந்தப் படத்தில் முற்றிலும் வேறு நட்சத்திரங்களை வைத்தே இயக்கியிருக்கிறார். முதல் பாகத்தில் உள்ளதைப் போன்றே அரண்மனை போன்ற வீட்டிற்குள் பேய் புகுந்துவிட்டது, அதை எப்படி அந்த குடும்பத்தினர் அழிக்கிறார்கள் என்ற ஒரு வரிக் கதைதான்.
த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா ஆகியோரின் கிளாமர் நடிப்பு இந்தப் படத்தில் எக்ஸ்ட்ராவாக அமைந்துள்ளது. பெயருக்குத்தான் சித்தார்த் ஹீரோ, மற்றபடி ஃபைட், ஆக்ஷன் என தன் பங்கை அதிகமாகவே வைத்திருக்கிறார் இயக்குனர். நேற்று முதல் நாளே இந்தப் படத்திற்கு பின் அன்ட் சி சென்டர்களில் அதிகப்படியான வரவேற்பு என்கிறார்கள். எப்படியும் படம் வசூலை அள்ளி விடும் என்ற எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கு உள்ளது.