வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பெங்கால் டைகர் படத்திற்கு பின்னர் டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் எவடு ஒக்கடு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எவடு ஒக்கடு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நாகார்ஜுனாவை அப்படத்தில் நடிக்க கேட்டுள்ளார். ரவி தேஜாவும் தனது அடுத்த படத்தில் இறங்கி விட்டார். இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பதாகக் கூறி பின்னர் கைவிடப்பட்ட ஆட்டோ ஜானி படத்தில் ரவி தேஜா நடிக்கவுள்ளதாக பூரி ஜெகன்நாத் ஏற்கனவே கூறினார்.
தற்போது இப்படத்தின் திரைக்கதையில் தனகேற்றவாறு சில மாற்றங்களைச் செய்யுமாறு ரவி தேஜா பூரி ஜெகன்நாத்திடம் கூறியுள்ளாராம். ரோச் படத்தில் பிசியாகியுள்ள பூரி ஜெகன்நாத் ஆட்டோ ஜானி படத்தை கையில் எடுத்துள்ளாராம். ஏற்கனவே ஐந்து முறை பூரி ஜெகன்நாத்தின் படங்களில் நடித்துள்ள ரவி தேஜா ஆறாவது முறையாக நடிக்க தயாராகி விட்டார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.