துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தமிழில் இன்னமும் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சித்தார்த். வெளிவந்த 'ஜிகர்தண்டா' படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'காவியத் தலைவன், எனக்குள் ஒருவன்' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. அந்த இரண்டு படங்களையும் அவர் பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால், சாதாரண ரசிகர்களை அந்தப் படங்கள் சென்றடையவில்லை. அதனால் சுந்தர் .சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். சுந்தர் .சி - சித்தார்த் முதன் முறை கூட்டணி அமைத்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படம் வெற்றிப் படமாக அமைந்ததே அதற்குக் காரணம்.
அதனால், மீண்டும் 'அரண்மனை 2' படம் தன்னை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் என்று சித்தார்த் நம்பிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் சொந்தமாகத் தயாரித்து நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' படத்தின் வெளியீட்டைக் கூட இந்தப் படத்திற்குப் பிறகு வெளியிடலாம் எனத் தள்ளி வைத்துவிட்டார். 'அரண்மனை 2' படம் வெற்றி பெற்றால் 'ஜில் ஜங் ஜக்' படத்திற்கும் பேருதவியாக இருக்கும் என்பது அவர் கணிப்பு. 'காதலில் சொதப்புதுவது எப்படி' படத்திற்குப் பிறகு சொந்தப் படத் தயாரிப்பில் இறங்கியுள்ள சித்தார்த் 'அரண்மனை 2, ஜில் ஜங் ஜக்' ஆகிய படங்கள் தமிழில் தன்னைக் கரை சேர்க்கும் என்று திடமாக நம்புகிறார்.