'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலா இயக்கும் படங்களில் ஒரு நாயகன் நடிக்கிறார் என்றால் அந்தப் படம் வெளிவந்ததற்குப் பிறகு அந்த நாயகனுக்கு திருப்புமுனை ஏற்படும் என்பது நிச்சயம். அப்படி ஒரு அனுபவத்தை விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா ஆகியோர் ஏற்கெனவே பெற்றிருக்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு அனுபவம் சசிகுமாருக்குக் கிடைக்காது போலிருக்கிறது. தாரை தப்பட்டை படத்தில் பணம் போட்டு படத்தையும் தயாரித்து சரிவர உருவாக்கப்படாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தனக்கிருந்த பெயரையும் கெடுத்துக் கொண்டார் என்று வினியோகஸ்தர்களே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
ஒரு கரகாட்டக் கலைஞரோ, ஒரு நாதஸ்வரக் கலைஞரோ அல்லது ஒரு கிராமியக் கலைஞரோ எப்படி இருக்க மாட்டார்களோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தைத்தான் சசிகுமாருக்காக பாலா உருவாக்கிவிட்டார் என்று அவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள். ஒரு ஊரில் உள்ள பெரிய மனிதர் கூட தினமும் பட்டு வேட்டி, சில்க் சட்டை, அங்கவஸ்திரம், எண்ணெய் வைத்து வாரிய தலை என தினமும் சுத்தமாக வலம் வர மாட்டார்.
ஆனால், கிராமியக் கலைஞர்கள் அவர்களுக்கு வேலை இருக்கிறதோ இல்லையோ தினமும் தங்களை பளிச்செனத் தெரியும்படி ஆடை அணிந்து அழகுபடுத்திக் கொண்டுதான் வலம் வருவார்கள். ஆனால், தாரை தப்பட்டை படத்தில் கரகாட்டக் குழுவுக்கே தலைவரான சசிகுமார் முந்தைய பாலா படங்களைப் போலவே அழுக்கு மனிதராக வலம் வருவது அவர்களைப் பற்றித் தெரிந்தவர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
படத்திற்கான பல எதிர்மறையான விஷயங்களில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பாலா அடுத்த படத்திலாவது பழைய பாலாவாக வரவேண்டும் என்றே பாலாவின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.