துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
மீகாமன், என்னை அறிந்தால், நானும் ரவுடிதான் போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் ஆத்மா. தற்போது திரைக்கு வந்துள்ள விஷாலின் கதகளி படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். இதையடுத்து தென்னிந்திய அளவில் பல படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். தினமலர் இணையதளத்திற்காக ஆத்மாவுடன் ஒரு சந்திப்பு...
கதகளியில் நடித்தது பற்றி?
கதகளி படம் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய லக்குன்னுதான் சொல்லனும். என்னை பார்த்த உடனே செலக்ட் பண்ணி அடுத்த நாளே பாண்டிராஜ் சார் ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டார். நான் போறதுக்கு முன்னாடிய 50 சதவிகிதம் படமாக்கிட்டார். கடலூர் ஷூட்டிங் போறப்பதான் என்னை செலக்ட் செய்தார். என்னை செலக்ட் பண்ணி 5 நாள்தான் ஷூட்டிங் என்று சொன்னார். ஆனால் நான் 25 நாள் நடித்தேன். டைட்டீல்ல இருந்து க்ளைமாக்ஸ் பைட் வரைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது பெரிய விசயம். என்னைப்பொறுத்தவரை பெரிய அதிர்ஷ்டம்னுதான் நினைக்கிறேன். அதற்காக டைரக்டர் பாண்டிராஜ்க்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஷாலுடன் நடித்த அனுபவம்?
விஷால் பந்தா இல்லாதவர். செட்டிற்குள் வந்தால் அடுத்து நடிக்க வேண்டிய சீன் பற்றி டிஸ்கஸ் செய்வார். அவரும் ஒரு புருடியூசர் என்பதால் டைரக்டரும், விஷாலும் பரபரப்பாகவே இருந்தனர். குறிப்பாக, விஷால் உதவி இயக்குனராகவும் ஒர்க் பண்ணியவர் என்பதால் டைரக்டருக்கு பெரிய ஒத்துழைப்பாக இருந்தார். சீன் பெட்டர்மெண்டுக்காக இன்வால்மென்டாக ஒர்க் பண்ணினார். பைட் சீன்களில் நேச்சுரலாக வரவேண்டும என்பதற்காக நிறையவே மெனக்கெட்டார்.
நடிப்புக்கு ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது?
கதகளி படத்தை நான் சென்னையிலுள்ள தேவி தியேட்டரில் பார்த்தேன். அப்போது நான் வெளியில் நின்று கொண்டிருந்தபோது ரசிகர்கள் என்னுடன் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். வயதான பெண்கள் வந்து இந்த வருடம் உங்களுக்கு நிறைய படம் வரணும் என்று என்னை ஆசீர்வாதம் செய்தனர். அது பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது என்னைப்பார்த்த ஒரு குழந்தை வெளியே வர பயந்து போய் நின்றது. அந்த அளவுக்கு எனது வில்லன் ரோல் அந்த குழந்தையை பாதித்திருக்கிறது. ஆக, இதற்கு முன்பு நான் மீகாமன், என்னை அறிந்தால் படங்களுக்கு பிறகு நானும் ரெளடிதான் படத்தில் ரசிகர்களுக்கு ஓரளவு அடையாளம் தெரிந்தேன். ஆனால் இந்த கதகளிதான் என்னை பெரிய அளவில் ரீச் பண்ணியிருக்கிறது. ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தந்திருக்கிறது.
கதகளிக்கு பிறகு புதிய படவாய்ப்புகள் கிடைத்திருக்கிறதா?
தமிழில் என் நடிப்பை பாராட்டிய 3 டைரக்டர்கள் தங்கள் படங்களில் நடிக்க அழைப்பு விடுப்பதாக கூறியுள்ளனர். மலையாளத்தில் ஒரு படம் புக்காகிவிட்டது. தீவிரவாதி கேரக்டர். டில்லியில் படப்பிடிப்பு நடக்கிறது. மேலும், 22-ந்தேதி தெலுங்கில் கதகளி ரிலீசாகிறது. என் போன்ற உருவம் கொண்டவர்களுக்கு தெலுங்கில் கண்டிப்பாக பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதனால் கதகளி தெலுங்கு ரிலீசுக்காக காத்திருக்கிறேன். அந்த வகையில, இந்த 2016-ம் வருடம் எனக்கு நல்லதொரு ஓப்பனிங்காக அமைந்திருக்கிறது.
தற்போது நடித்து வரும் படங்கள்?
விஜய்யுடன் தெறி படத்தில் நடிக்கிறேன். கதகளி அளவுக்கு பெரிய வேடம் இல்லை என்றாலும் விஜய் படம் என்பதால் இன்னும் பிரபலமாகி விடுவேன். பரத்-கதிர் நடிக்கும் என்னோடு விளையாடு படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நெகடீவ் வேடத்தில் நடித்திருக்கிறேன். என்மேல்தான் கதை மூவ் ஆகும். இந்த படத்தை இயக்கி வரும் அருண், கதகளி படத்தைப்பார்த்து விட்டு சூப்பராக நடித்திருப்பதாக பாராட்டினார். இந்த வருடத்திற்குள் 3 படங்கள் வரை கொடுப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். தவிர, சூர்யாவின் எஸ்-3 படத்திலும் கேட்டிருக்கிறார்கள். அந்த படத்திலும் நல்ல ரோல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறும் வில்லன் நடிகர் ஆத்மாவுக்கு, இந்தி சினிமா வரை பரவலாக நடிக்க வேண்டும் என்பதுதான் எதிர்கால திட்டமாம்.