'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னையில் நடைபெற்ற, 13வது சர்வதேச திரைப்பட விழாவில், அமிதாப் பச்சன் விருதை நயன்தாராவும், சிறந்த படமாக கிருமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்தாண்டு நடந்த, 13வது சர்வதேச திரைப்பட விழா, ஜன., 6 - 13 வரை நடைபெற்றது. உலகின், 57 நாடுகளிலிருந்து, 184 படங்கள் இதில் திரையிடப்பட்டன.
சர்வதேச திரைப்பட விழாவை சிறப்பாக நடத்தும் வண்ணம் கடந்த, 2008 முதல் மாநில அரசு நிதியுதவி அளித்து வருகிறது. ஆண்டுதோறும் வளர்ந்து வரும் இந்த திரைப்பட விழாவில், கடந்த ஆண்டை விட இம்முறை அதிக எண்ணிக்கையில் உலகத் திரைப்படங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
விழாவில், மறைந்த, இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், ஆச்சி மனோரமா ஆகியோரை நினைவுகூர்ந்து, அவர்களை கவுரவிக்கும் வகையில் ஏழு படங்கள் திரையிடப்பட்டன. இந்தியன் பனோரமா பிரிவில், 11 இந்திய மொழிப் படங்களும், தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில், 12 தமிழ்ப் படங்களும் கலந்து கொண்டன. இவற்றோடு, தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய குறும்படங்களும் திரையிடப்பட்டன.
விழாவின் இறுதி நாளான நேற்று, பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், நடிகை நயன்தாரா, நடிகர்கள் அரவிந்த்சாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நடிகை நயன்தாராவுக்கு அமிதாப் பச்சன் விருதும், இயக்குனர் பாலசந்தர் விருதும் வழங்கப்பட்டது. அதேபோல் நடிகர் அரவிந்த்சாமிக்கும் பாலசந்தர் விருது வழங்கப்பட்டது. சிறந்த படமாக, அனுசரண் இயக்கிய கிருமி படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த இரண்டாவது படமாக, ரேடியோ பெட்டி தேர்வு பெற்றது. இப்படத்தில் நடித்த லஷ்மணனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.