தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்துள்ள 'கெத்து' திரைப்படம் நாளை வெளிவர உள்ளது. ஆனால், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள எமி ஜாக்சன் ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பில் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு கூட ஜல்லிக்கட்டுக்கு எதிராக அவர் டிவிட்டரில் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதி மன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களில் உள்ள மக்கள் கோபமடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
பீட்டா அமைப்பு நடிகைகள் மூலம்தான் அதிகமான பிரச்சாரங்களில் ஈடுபடுகிறது. குறிப்பாக த்ரிஷா, எமி ஜாக்சன் ஆகியோர் அந்த அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதனால் நேற்று அவர்களிருவரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
த்ரிஷா, எமி ஜாக்சன் இருவரும் பீட்டா அமைப்பிலிருந்து விலகும் வரை அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் நடிக்கும் படங்களைப் பார்க்காமல் புறக்கணிக்கப் போவதாகவும், அவர்கள் நடிக்கும் படங்களை எதிர்க்கப் போவதாகவும் சொல்லி வருகின்றனர். இதனால், எமி ஜாக்சன் நாயகியாக நடித்து நாளை வெளியாக உள்ள 'கெத்து' படத்திற்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதோடு த்ரிஷா நாயகியாக நடித்து வெளிவர உள்ள 'அரண்மனை 2' படத்தையும் எதிர்க்கப் போவதாகப் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.