ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சுமார் 25 வருடங்களுக்கு முன் வெற்றிகரமான விநியோகஸ்தராக விளங்கியவர் கேயார். அவர் வாங்கி வெளியிட்ட படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்து லாபத்தைக் குவித்ததால், கேயார் எந்தப் படத்தை வாங்குகிறார் என்பதை பார்த்து மற்ற விநியோகஸ்தர்களும் அந்தப் படத்தை வாங்கினார்கள். அதன் பிறகு சில வருடங்கள் ஆஸ்கார் ரவிசந்திரனின் கொடி பறந்தது. அவர் ஏதாவது ஒரு படத்தின் ஏரியாவை வாங்கினார் என்று தெரிய வந்தால் போதும். உடனே மற்ற விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டுக் கொண்டு அந்தப் படத்தை வாங்கினார்கள்.
பிறகு உதயநிதி ஸ்டாலின். இவர் வாங்கி வெளியிட்ட மைனா வெற்றியடைந்த பிறகு உதயநிதி வாங்கினால் படம் ஹிட் என்ற நம்பிக்கை நிலவியது. இந்த வரிசையில் இப்போது தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி. மறைந்த இயக்குநர் ராமநாராயணனின் மகனான முரளி, கை வைத்த படங்கள் எதுவும் சோடை போனதில்லை.
காஞ்சனா, பாகுபலி, டிமான்ட்டி காலனி, மாயா என இவர் வாங்கிய படங்கள் அனைத்தும் வசூல் சாதனை படைத்தவை. தற்போது கதகளி படத்தை வாங்கியுள்ள முரளி, ஜனவரி 29 அன்று அரண்மனை-2 படத்தை வெளியிட உள்ளார்.
இந்தப் படத்தை அடுத்து ஜாக்சன் துரை படத்தை வாங்கியுள்ளார். மாசாணி, சலீம் ஆகிய படங்களைத் தயாரித்த ஸ்ரீக்ரீன் புரடக்ஷன் சரவணன் தற்போது ஜாக்சன் துரை என்ற படத்தைத் தயாரித்துள்ளார். நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சிபிராஜ் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடம் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதை மிக சரியாக கணித்து ஜாக்சன் துரை படத்தை முரளி ராமசாமி வாங்கியுள்ளார்.
பின் குறிப்பு- இதுவும் பேய்ப்படம். பேய்ப்படத்துக்கும் முரளி ராமசாமிக்கும் அப்படியொரு ராசி....!