மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் |
விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வருகிறார். சண்முக பாண்டியன் தற்போது சென்னை ஸ்மாஷர்ஸ் பேட்மிட்டன் அணிக்கு அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி பாணியில் பல நாட்டு வீரர்கள் விளையாடும் பேட்மிட்டன் போட்டிகள் நடக்க இருக்கிறது. அதில் சென்னை அணியை வாங்கி இருப்பவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். அவர்தான், தன் தம்பியை அந்த அணியின் அம்பாசிடராக நியமித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
எங்கள் அணியின் அம்பாசஸசிடராக வளர்ந்து வரும் இளம் நாயகன் சண்முக பாண்டியன் உள்ளார். எனது சகோதரர் என்பதால் சண்முக பாண்டியனை அம்பாஸிடராக நியமிக்கவில்லை. இயல்பாகவே அம்பாஸிடரருக்கு அதிக உயரம் தேவைப்படுவதால் அணியினர் அவரை தேர்வுசெய்துள்ளனர் . சென்னை அணியின் லோகோவில் சிங்கமுகத்தை வைத்ததற்கு காரணம், நான் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரன். இரண்டு ஆண்டுகள் சென்னை அணி இல்லாததால் அந்த அணியை ஞாபகபடுத்தும் வகையில் சிங்க லோகோவை வைத்துள்ளோம். என்கிறார் விஜய பிரபாகரன்