தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2015ம் ஆண்டின் கடைசி மாதம் நாளை ஆரம்பமாக உள்ளது. எப்படியும் வாரத்திற்கு நான்கைந்து படங்கள் என்று சொன்னால் கூட டிசம்பர் மாதத்தில் எப்படியும் 20 படங்களக்கு மேல் வெளிவந்து விடும். இன்றுடன் முடியும் நவம்பர் மாதம் வரை இந்த 11 மாதங்களில் 196 படங்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 4ம் தேதியன்று வெளிவரும் படங்களைச் சேர்த்தால் அந்த எண்ணிக்கை 200ஐத் தொட்டுவிடும். அதற்கடுத்த மூன்று வெள்ளிக் கிழமைகளில் சுமாராக 20 படங்கள் வெளிவந்தால் 2015ல் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக 220 படங்களைக் கடந்து ஒரு புதிய சாதனையைப் படைத்துவிடும்.
டிசம்பர் 4ம் தேதியன்று 'ரஜினி முருகன், ஈட்டி, உறுமீன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' ஆகிய படங்கள் வெளிவருகின்றன. 'பசங்க 2' படமும் முதலில் வெளிவருவதாக இருந்து அந்தப் படம் டிசம்பர் கடைசி வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் 'ரஜினி முருகன்' அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.
தமிழ்த் திரையுலகில் தங்களது தனித் திறமைகளால் முன்னேறிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், அதர்வா, பாபி சிம்ஹா ஆகியோர் டிசம்பர் 4 வெளியீட்டில் போட்டி போடுகிறார்கள். இவர்களின் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து இவர்கள் அடுத்த கட்டத்திற்குப் பயணமாவார்கள் என்பது மட்டும் உறுதி. மூன்று படங்களுமே வெற்றி பெறுமா, அல்லது எந்தப் படம் வெற்றி பெறும், யார் முன்னணி பெறுவார்கள் என்பது 4ம் தேதி காலையில் தெரிந்துவிடும்.