மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கங்காரு, வந்தாமலை உள்பட சில படங்களில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா. தற்போது சாரல் என்ற படத்தில் நடித்து வருகிறார். மைனா படம் போன்று ஒரு பேருந்திற்குள் உருவாகும் காதலை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ளது. இதற் கடுத்து விஜய் வசந்த் நடிக்கும் திருப்பதி லட்டு என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்ரீ பிரியங்கா. இதுபற்றி ஸ்ரீ பிரியங்கா கூறுகையில், கங்காரு படத்தில் செண்டிமென்ட் வேடத்தில் நடித்த நான், வந்தாமலை படத்தில் வெறித்தனமாக காதலிக்கும் ஒரு பெண்ணாக நடித்தேன். அந்த படத்திற்காக சென்னை தமிழ் பேசி நடித்தேன். எனது நடிப்பைப் பார்த்து விட்டு பலரும் பாராட்டினார்கள். அதன்பிறகுதான் திருப்பதி லட்டு என்ற படம் எனக்கு கமிட்டானது.
மேலும், இப்போது நான் நடித்து திரைக்கு வர தயாராக உள்ள சாரல் படத்தில் மனசை மயிலிறகாய் வருடும் ஒரு காதல் கதையில் நடித்துள்ளேன். அதாவது வந்தாமலை படத்தில் அதிரடியாக காதலித்த நான், இந்த படத்தில் மென்மையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறேன். அதனால் நடிப்பில் இன்னும் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறேன். இந்த படத்தில் நடித்த எனக்கும் மனதளவில் பெரிய திருப்தி கிடைத்துள்ளது. அதோடு, அடுத்து எந்தமாதிரியான வெயிட்டான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்கிற தைரியத்தைக் கொடுத்துள்ளது என்று கூறும் ஸ்ரீ பிரியங்கா, அடுத்தபடியாக முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதிலும் ஆர்வமாக உள்ளாராம். அப்படி வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் கதைக்கேற்ற கிளாமரை வெளிப்படுத்தவும் தயாராக இருக்கிறாராம்.