இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
என்ஹெச்7 வீக்என்டர் என்பது பல்வேறு நகரங்களில் நடைபெறும் ஒரு இசை நிகழ்ச்சி ஆகும். கடந்த 2010 ம் ஆண்டிலிருந்து இந்த இசை நிகழ்ச்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வருட இசைநிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். தில் சே மற்றும் ஓ ஹம்டும் சுனியோ ரே போன்ற போன்ற காதல் பாடல்களின் மூலம் நிரம்பி வழிந்த அந்தக் கூட்டத்தில் பல்வேறு இதயங்களை ரகுமான் தன் வசப்படுத்தி விட்டார். சர்வதேச டிஜே மார்க் ரான்சன் மற்றும் அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற மெகதீத்( இசைக்குழுவினர்) ஆகியோர் ரகுமானுக்கு பக்கபலமாக விளங்கி இசை மற்றும் பாடல்களில் அவருக்கு உதவிகள் செய்தனர். "இந்த இசை நிகழ்ச்சிக்கு நான் இங்கு என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்தேன். ஏனெனில் இந்தத் தலைமுறையின் இசையார்வம் முற்றிலும் மாறிவிட்டது. ஆனால் எனது இசையை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நினைத்தேன். கடவுள் ஆசீர்வாதம் செய்வார்" என நிகழ்ச்சிக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டு இருந்தார். அதே போன்று அவர் மேடையில் தோன்றியபோது இளைய தலைமுறையினர் அவருக்கு மிகுந்த வரவேற்பு அளித்தனர். தற்போது இவரின் இசையில் வெளியான தமாஷா (பாலிவுட்) படம் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.