பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பெரும்பாலும் நடிகர்களைப் பொறுத்தவரை பாடியை பிட்னஸாக வைத்துக்கொள்வதற்கு டயட்ஸ், ஜிம்னாஸ்டிக் பயிற்சி என்றுதான் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த விசயத்தில் ஆர்யா மாறுபட்டவராக இருக்கிறார். அதாவது சாலைகளிலேயே ஹெல்மெட் அணிந்தபடி அவர் சைக்கிள் ஓட்டிச்செல்கிறார். அதுவும் தனது வீட்டை சுற்றி அவர் ரவுண்டு அடிப்பதில்லை. சென்னையில் தொடங்கி மகாபலிபுரம் வரை சென்று வருகிறார்.
மேலும், சந்தானம் ஒருமுறை தானும் சைக்கிள் பயிற்சிக்கு வருவதாக சொன்னபோது, அவரது வீட்டுக்கதவை அதிகாலை 5 மணிக்கே போய் தட்டியிருக்கிறார் ஆர்யா. அதையடுத்து ரெண்டு பேருமாக சேர்ந்தே சென்னை சிட்டியை கடந்து வெகுதூரம் ஆளுக்கொரு சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது சாலையில் இருந்த ஒரு டீ கடையில் டீ, பஞ்ஜி சாப்பிட்டிருக்கிறார் ஆர்யா. இதை அந்த சமயத்தில் ஒரு மேடையில் தெரிவித்தார் சந்தானம்.
இந்த நிலையில், தனது உடம்பை பராமரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஆர்யா, கடந்த வாரத்தில் சென்னையில் மழை கொட்டித்தீர்த்தபோதும், தனது சைக்கிள் பயணத்தை சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை நடத்தியிருக்கிறார். அப்போது ஆர்யாவுடன் அவரது சில நண்பர்களும் உடன் சென்றார்களாம்.