ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு நடிக்க மாட்டார் என்றுதான் முதலில் கூறப்பட்டது. விஜய்யும் அதைத்தான் கூறிவந்தார். ஆனால் அமலாபால் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். முன்புபோல் இல்லாமல் அழுத்தமான கேரக்டர் உள்ள படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். குழந்தைகள் படம் என்பதாலும், சூர்யா கேட்டுக் கொண்டதாலும் பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சூர்யாவின் மனைவியாகவும், ஆசிரியையாகவும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் அவர் இந்தி ரீமேக் படமொன்றில் நடிக்க இருக்கிறார். இந்தியில் வெளியாகி பல விருதுகளை வென்ற நில் பட்டே சனட்டா என்ற படம் தமிழில் ரீமேக்காக இருக்கிறது. இதில் இந்தியில் ஸ்வாரா பாஸ்கர் நடித்த கேரக்டரில் அமலா பால் நடிக்க இருக்கிறார். இதில் நடித்த ஸ்வாரா பாஸ்கர் பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திப் படத்தை பிரபல இந்தி இயக்குனர் நிதிஷ் திவாரியின் மனைவி அஸ்வினி அய்யர் இயக்கி உள்ளார். தமிழ் ரீமேக்கை நிதிஷ் திவாரியுடன் இணைந்து தனுஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கலாம் என்றும் தெரிகிறது. இது அம்மாவுக்கும் மகளுக்குமான பாசப்போராட்டத்தை சொல்லும் படம். மகளாக அமலாபால் நடிக்க அம்மாவாக ரேவதி நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.