'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் இருந்து மூன்று ஜோடிகளில் மாதவன் - மீரா ஜாஸ்மின், சூர்யா - இஷா தியோல், சித்தார்த் - த்ரிஷா ஆகியோர் இருந்தனர். 2004ல் வெளிவந்த படத்தில் ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களைக் கவர்ந்தது. தமிழில் அப்போதே ஒரு மல்டி ஸ்டார் படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். ஆனால், அப்போது படத்தில் நடித்த அனைவருமே வளர்ந்து வரும் நடிகர்களாகவே இருந்தார்கள். தமிழில் அதற்குப் பிறகு அப்படி ஒரு கூட்டணி மீண்டும் அமையவில்லை.
11 வருடங்களுக்குப் பிறகு அந்த ஜோடிகளில் ஒன்றான சித்தார்த், த்ரிஷா ஜோடி 'அரண்மனை 2' படத்தின் மூலம் தமிழில் மீண்டும் இணைந்துள்ளது. பொங்கலுக்கு வெளியாக உள்ள 'அரண்மனை 2' படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. “12 வருடங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோருடன் பீச்சில் படப்பிடிப்பு. காலம் பறக்கிறது,” தற்போதைய படப்பிடிப்பு பற்றி 'அரண்மனை 2' படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
'அரண்மனை 2' படத்திற்கு முன்பாக சித்தார்த் நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' அடுத்த மாதம் வெளியாகிறது.