அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல தென்னிந்தியத் திரையுலகிலும் வேறு எந்த ஒரு ஹீரோயினுக்கும் வழங்கப்படாத சம்பளம், நயன்தாராவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்ரமுடன் எந்தக் காலத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நயன்தாரா, விக்ரமுடன் ஜோடி சேர்ந்தது எப்படி என்று கடந்த வாரம் கோலிவுட்டே ஆச்சரியமாகப் பார்த்தது. அந்த ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ள பலரும் முனைப்பு காட்டினர்.
தற்போதுதான் அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. நயன்தாராவைப் பொறுத்தவரையில் எப்போதுமே தன்னுடைய சம்பளத்தில் தெளிவாக இருப்பார். வேண்டாம் என்று சொன்னால் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்பதால் சம்பளத்தை அதிகப்படியாகக் கேட்பாராம். அப்படிக் கேட்டால் அவர்களாகவே போய்விடுவார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். அப்படியும் சிலர் அந்த அதிக சம்பளத்திற்கு சம்மதித்தால் நடித்துவிடுவாராம். ஏற்கெனவே, இப்படியாக சில படங்களில் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.
விக்ரம் படத்திற்காகவும் அப்படித்தான் மறுப்பதற்காக சம்பளத்தை அதிகமாகக் கேட்கிறார். ஆனால், நயன்தாராவே ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த சம்பளத்தை அவருக்குக் கொடுக்க சம்மதித்திருக்கிறார்கள். அவ்வளவு சம்பளமா என ஆச்சரியப்பட்டு நயன்தாரா யோசிப்பதற்குள் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள் என்கிறது கோலிவுட்டின் கிசுகிசு வட்டாரம். நயன்தாராவுக்கான சம்பளம் மட்டுமே 3 கோடியாம். எத்தனை ஹீரோயின்கள் அடுத்து சம்பளத்தை உயர்த்தப் போகிறார்களோ...?