நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
'பாகுபலி' படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து இந்தியத் திரையுலகில் அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற ஒரு நடிகராக தன்னுடைய உயரத்தைப் போலவே உயர்ந்து நிற்கிறார் ராணா டகுபதி. அந்தப் படத்தில் நடித்த நாயகன் பிரபாஸுக்குக் கூட இந்த அளவிற்கு பெயரும் புகழும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். அவர் அடுத்தும் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறார். தெலுங்கில் மட்டுமே முன்னணியில் வந்தால் போதும் என்று அவர் நினைப்பதாகத் தெரிகிறது. ஆனால் ராணா டகுபதி ஏற்கெனவே, தெலுங்கைத் தவிர ஹிந்தி, தமிழ் மொழிகளிலும் சில முக்கியமான படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது தமிழில் மீண்டும் ஒரு முக்கிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. பாலா இயக்கத்தில் ஐந்து நடிகர்கள் நடிக்கும் படத்தில் தெலுங்குத் திரையுலகத்தைச் சார்ந்த ராணா டகுபதியும் ஒரு நடிகராக இருப்பது இங்குள்ள பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. மேலும், தமிழில் தற்போது 'பெங்களூரு டேய்ஸ்' ரீமேக் படத்தில் ஆர்யா, பாபி சிம்ஹா ஆகியோருடன் ஒரு நாயகனாகவும், சிம்பு நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்திலும் நடித்து வருகிறார். 'பாகுபலி' படத்திற்கு முன் அஜித்துடன் நடித்த 'ஆரம்பம்' படம் அவருக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
ஒரு மொழி சார்ந்த நடிகராக இல்லாமல் ஒரு இந்திய நடிகராக ராணா டகுபதிக்கு கிடைத்து வரும் தனி அங்கீகாரத்தை தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த மற்ற முன்னணி ஹீரோக்களே ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.