‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சாட்டை படத்தை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோ தற்போது தயாரித்துள்ள படம் சவுகார்பேட்டை, ஸ்ரீகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் அதில் ஒன்று மந்திரவாதி மற்றொன்று சவுகார்பேட்டை இளைஞன். ராய் லட்சுமி சவுகார்பேட்டை சேட்டு பொண்ணாக இருந்து பேயாக மாறுகிற கேரக்டர். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். டிசம்பர் மாதம் வெளிவருகிறது.
அரண்மனை படத்தில் பேயாக நடித்த அனுபவத்தை கொண்டு ராய் லட்சுமி இதில் காட்டு காட்டு என்று பயம்காட்டுகிறார். இதுபற்றி இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது: அரண்மனை படம் பார்த்து தான் அவரை இந்த படத்துக்கு கமிட் செய்தோம். பேய் வேடம் கொஞ்சம் அகோரமாகவும் நடிக்க வேண்டும். சுடுகாட்டில் ஷூட்டிங் இருக்கும் என்றோம். அதற்கு ஒப்புக்கொண்டு நடித்தார். "எனக்கு கேரக்டர் பிடிச்சிருக்கு அதுக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க செய்றேன்" என்று துணிச்சலுடன் வந்தார்.
சில காட்சிகளில் அவர் தொண்டை கிழியும் அளவுக்கு கத்தி நடித்துவிட்டு பிறகு தொண்டை வலியால் அவதிப்பட்டார். சில காட்சிகளுக்கு பல மணி நேரம் மேக்அப் போட வேண்டியது இருந்தது. இதற்காக மணி கணக்கில் காத்திருந்தார். அந்த அளவிற்கு டெடிக்கேட்டிவாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் ராய் லட்சுமியை ரசித்து பார்ப்பவர்கள் அதன்பிறகு பயப்படுவார்கள் என்கிறார் வடிவுடையான்.