பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
'கோலி சோடா' படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கிய '10 எண்றதுக்குள்ள' படம் விஜயதசமியன்று வெளியாகி தோல்வியடைந்தது. மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனம், விக்ரம், சமந்தா போன்றே முன்னணி நட்சத்திரங்கள் இருந்தும் சரியான கதை இல்லாதது படம் தோல்வியடையக் காரணமாக அமைந்தது. படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை விக்ரமே இயக்கினாராம்.
இயக்குனரான விஜய் மில்டனே படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியதால் விக்ரம் தான் நடிக்காத காட்சிகளுக்கு இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. விஜய் மில்டனை அழைத்து விக்ரம் தன் படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தது ஏன் என்று இப்போது புரிகிறதல்லவா என கோலிவுட்டிலேயே நக்கலாகச் சிரிக்கிறார்கள்.
முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படங்களில் நடிக்கும் போது மட்டுமே விக்ரம் அவர்கள் சொல்வதைக் கேட்பார் என்றும் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் போது அவர் இயக்குனர்களின் வேலையில் தலையிடுவார் என்று கோலிவுட்டில் எப்போதுமே சொல்வார்கள். '10 எண்றதுக்குள்ள' படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது என்கிறார்கள். இந்தப் படத்தைத் தயாரித்த விதத்தில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு 20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்றும் சொல்கிறார்கள்.