இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகை அனுஷ்கா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் ருத்ரமாதேவி. இயக்குனர் குணசேகர் தயாரித்து இயக்கிய இப்படம் பல தடைகளைத் தாண்டி திரைக்கு வந்தது. ரூ.80 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.60 கோடி வசூல் செய்தது. இருப்பினும் மனம் தளராத குணசேகர் மீண்டும் சரித்திரப் படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
குணசேகர், வீர அபிமன்யு எனும் தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளார். இதனால் மகாபாரதத்தில் வரும் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் கதையைத் திரைப்படமாக குணசேகர் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. தெலுங்கு திரை உலகின் மறைந்த பிரபல நடிகர் என்.டி.ராமா ராவ் கிருஷ்ணராக நடிக்க மறைந்த நடிகர் சோபன் பாபு அபிமன்யுவாக நடித்த வீர அபிமன்யு திரைப்படம் இயக்குனர் மதுசூதன ராவ் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது.
தற்போது மீண்டும் அப்படம் புதிய தொழில் நுட்பத்தில் டோலிவுட்டில் உருவாகவுள்ளதாம். இதில் ருத்ரமாதேவி படத்தில் ஆக்ரோஷ முகம் காட்டிய ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் அபிமன்யுவாக நடிக்கலாம் என்று கூறப்படுகின்றது. சரித்திரப் படங்களில் நடிக்க விரும்பாத டோலிவுட்டின் மகேஷ் பாபுவை அபிமன்யுவாக நடிக்க வைக்கலாம் என்று குணசேகர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.