தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இது.. இதுதான் இன்றைய லேட்டஸ்ட் நியூஸ்.. பின்னே கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருந்தாலும் அவ்வப்போது தனது நடிப்பு ஆசையால் தனது படங்களில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து தலைகாட்டிவிட்டு போன இயக்குனர் கௌதம் மேனன் ஒரு முழுப்படத்தில் நடிகராகவே நடிக்கிறார் என்றால் ஆச்சர்யம் இல்லாமல் வேறென்ன..? ஆனால் அவரது முழுநேர நடிப்பை பார்க்கும் பாக்கியம் முதலில் மலையாள ரசிகர்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது நண்பர்களே.. ஆம் மலையாள படம் ஒன்றில் தான் நடிக்கிறார் கௌதம் மேனன்.
மலையாள சினிமாவில் இளம் இயக்குனராகவும் கதாசிரியராகவும் நடிகராகவும் வலம் வரும் வினீத் சீனிவாசன் தனது நான்காவது படத்தை இயக்கும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். படத்தின் பெயர் 'ஜேகப்பிண்டே சௌகராஜ்ஜியம்'. படத்தின் ஹீரோவாக நிவின் பாலி நடிக்கிறார். நிவின்பாலி நடிகராகவும் வினீத் சீனிவாசன் இயக்குனராகவும் ஒரே படத்தில் தான் அறிமுகமானார்கள் என்பதும் இது அவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான அறிவிப்பை வினீத் சீனிவாசன் ஒரு துண்டுச்சீட்டில் பேனாவில் எழுதி, அதை தனது பேஸ்புக்கில் பதிவிட்டது சுவாரஸ்யம் என்றால், அதில் நடிகர்கள் பட்டியலில் கௌதம் மேனன் பெயரும் இடம்பெற்றிருந்தது தான் மிகப்பெரிய ட்விஸ்ட்.. ஏற்கனவே தான் எழுதிய 'ஒரு வடக்கன் செல்பி' படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் கௌதம் மேனனுக்கு ஒரு கூடை ஐஸ் வைத்திருந்தார் வினீத் சீனிவாசன். அது இந்தவிதமாக இப்போது ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இதுதவிர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.