'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெயர்தான் மலையாள சினிமா.. ஆனால் கமர்ஷியல் படங்கள் அனைத்திலும் பத்தில் இருந்து முப்பது சதவீதமத்திற்கு குறையாமல் தமிழ் வசனங்களோ அல்லது தமிழ் நடிகர்களை பற்றிய காட்சிகளோ இல்லாமல் மலையாள சினிமா வெளியாவதில்லை.. மலையாள படங்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு இது நன்றாகத்தெரியும். அந்த வகையில் மலையாள நடிகரும், பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித் 'தளபதி' என்கிற பட்டத்துக்கு சொந்தக்காரராக மாறிய சுவாரஸ்யமான நிகழ்வை ஒரு படத்தில் காட்சியாக வைத்துள்ளார்கள்.
கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் வெளியான 'அமர் அக்பர் அந்தோணி' படத்தில் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா மூவரும் ஹீரோக்களாக நடித்திருகிறார்கள். இதில் அந்தோணியாக நடித்துள்ள இந்திரஜித் கதைப்படி, ஒரு சினிமா தியேட்டரில் ரஜினி நடித்த 'தளபதி' படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது தியேட்டரிலேயே பிறந்தவராம். அதனால் அவரை பிருத்விராஜ் உட்பட அனைவரும் அவரை தளபதி என்றே அழைப்பதாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, தளபதி படத்தில் இருந்து ரஜினியின் கிளிப்பிங் கட்சிகளும் பின்னணியில் சிறிது நேரம் காட்டப்படுகிறது. இத்தனைக்கும் அந்தப்படத்தில் மம்முட்டி நடித்திருந்தாலும் கூட அவரை பற்றிய பேச்சும் காட்சிகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.