பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் என்னமோ ஏதோ, புத்தகம் படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்தி சிங். ஆனால் இங்கு அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. ஆந்திர பக்கம் கரை ஒதுங்கியவதற்கு அதிர்ஷ்டம் கூறையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. டாப் ஹீரோக்களின் சாய்ஸ் பட்டியலில் இருக்கிறார். அண்மையில் ராம் சரணோடு வெளிவந்த புரூஸ்லீ தி பைட்டர் படத்தில் நடித்திருக்கிறார். பெண்கள் மது அருந்துவது பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
பொதுவாக மது அருந்துவது தவறானது, உடம்புக்கு கேடான விஷயம். தண்ணி அடிச்சிட்டு ரோட்டுல அலம்பல் பண்ணினா லூசு மாதிரி பார்ப்பாங்க. தண்ணி அடிக்கிறதுல ஆண், பெண் வித்தியாசம் எதுக்கு பார்க்கணும், யார் அடிச்சாலும் தப்பு தப்புதான். பெண்ணோ ஆணோ தண்ணி அடிக்கிறது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுல யாரும் தலையிடக்கூடாது. என்னை கேட்டா அளவு மீறாம பார்த்துக்கணும். அளவு மீறினா எதுவுமே நல்லது இல்லை. எனக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் இல்லப்பா... என்கிறார் ரகுல் ப்ரீத்தி சிங்.