ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பணம் கொடுக்கல், வாங்கல், விவகாரம் தொடர்பாக, நடிகர் ரஜினி மனைவி லதா மீது, பெங்களூரு போலீசார் பதிவு செய்துள்ள, முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆருக்கு, கர்நாடக ஐகோர்ட், ஆறு வாரங்கள், இடைக்கால தடை விதித்துள்ளது.
'கோச்சடையான் திரைப்பட உரிமையை தருவதாக கூறி, எங்களிடமிருந்து லதா ரஜினி, 10 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, மோசடி செய்துவிட்டார்' என, குற்றம்சாட்டி, பெங்களூரைச் சேர்ந்த 'ஆட் ப்யூரோ அட்வர்டைசிங்' கம்பெனியினர், பெங்களூரு காவல் நிலையத்தில், புகார் அளித்தனர். இதன் பேரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை.
இதையடுத்து இந்நிறுவனம், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் முறையிட்டது. எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்படி, போலீசாருக்கு கோர்ட் உத்தரவிடவே அவர்களும், லதா மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர்.
இதை ரத்து செய்யக்கோரி லதா, அதே கோர்ட்டில், மனு செய்தார். ஜூனில், இதற்கு கோர்ட் மறுக்கவே, லதா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி ரத்னகலா முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.
அப்போது, லதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது: கோச்சடையான் படத்தை, ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். இப்பட விஷயத்தில், லதாவுக்கோ, அவரது கணவர் ரஜினிக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. ஆட் ப்யூரோ அட்வர்டைசிங் கம்பெனியினர், தேவையின்றி ரஜினி குடும்பத்தின் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரத்னகலா, லதா மீதான எப்.ஐ.ஆருக்கு, ஆறு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்தார்.