டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாபநாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் தூங்காவனம். கமலிடன் உதவியாளராக இருந்த ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருக்கும் இப்படத்தில், கமல் உடன் த்ரிஷா, மதுஷாலினி, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகி சேது, ஆஷா சரத், உமா ரியாஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தூங்காவனம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது.
விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன்... தூங்காவனம் படம் இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள படம் என்பதால் ஒரு படத்திற்கு 30 நாள் வீதம் இரண்டு மொழிகளிலும் சேர்த்து 60 நாட்களில் எடுத்து இருக்கிறோம். இது எனது தனிப்பட்ட ஒருவனின் உழைப்பு கிடையாது. இது மந்திர விளையாட்டு அல்ல, அனைவரும் சேர்ந்து உழைத்த உழைப்பு இது. முன்னிலையில் இருக்கும் 12 பேரை மட்டும் வைத்து ஒருபடத்தை எடுத்துவிடமுடியாது. டிபன் கொடுக்கிறவர் சமைக்கிறவர், கார்டிரைவர் உட்பட யூனிட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்தால்தான் இது நடக்கும். சரியான திட்டமிடுதலும், நல்ல டீமும் அமைந்தால் நிச்சயம் இதுபோன்று அமையும். இப்போது எனக்கு அப்படி ஒரு டீம் கிடைத்துள்ளது. தூங்காவனம் படம் எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும் என்றார்.
முன்னதாக இப்படத்தின் இசை தட்டை வெளியிட விழா குழுவினர் முன்வந்தபோது அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டார் கமல். காரணம். ஏற்கனவே தூங்காவனம் படத்தின் பாடல்கள் ஐ-டியூனில் வெளியாகிவிட்டது என்றவர், இந்தநிகழ்ச்சியை தமிழகம் முழுவது 25 தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும், இணையதளத்திலும் நேரடியாக நேரலை செய்யப்பட்டதாகவும், லட்சக்கணக்கான பேர் இந்த நிகழ்ச்சியை காண்பதாகவும் கமல் தெரிவித்தார்.