ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகி இருக்கிறார் விஜய். அதன்காரணமாக அவரது ஒவ்வொரு படங்களின் டீசர், டிரைலர் என ஒவ்வொன்றும் வெளியாகும்போதும் அவரது ரசிகர்கள் இணையதளங்களில் அதை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அதோடு படங்கள் வெளியாகும்நேரத்திலும் பெரிய பரபரப்பை கிரியேட் பண்ணி விட்டு வருகின்றனர். மேலும், விஜய்யை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தவறாக சித்தரித்தால் அதற்கு உடனுக்குடன் பதில் கொடுத்தும் மோதிக்கொள்கின்றனர்.
இந்த நிலையில், புலி படத்தின் ரிலீஸ் அன்று விஜய்யின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியபோது பல கோடிகள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அன்றைய தினம் கோடம்பாக்க நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என 25க்கும் மேற்பட்டோர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் சேராத 100 கோடி ரூபாய் சிக்கியதாகவும் அதன்பிறகு செய்திகள் வெளியாகின.
அதோடு வரி ஏய்ப்பு பட்டியலில் விஜய்யின் பெயரும் இடம்பெற்றது. ஆனால் தற்போது அதற்கு விஜய்தரப்பில், ஒவ்வொரு ஆண்டும் தனது வருமானத்திற்குரிய வரியை எந்தவித பாக்கியும் இல்லாமல் அவர் செலுத்தி வருவதாகவும், மீடியாக்கள்தான் இந்த செய்தியை தவறாக பரப்பி விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, விஜய்யின் ரசிக கோடிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு, இணையதளங்களில் இந்த தகவலை வெளியிட்டு விஜய் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் முயற்சியில் வரிந்து கட்டியுள்ளனர்.