ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
டார்லிங், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என தொடர்ச்சியாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்தாகி விட்டது என்பதால், அடுத்தபடியாகவும் சிக்சர், பவுண்டரிகளை விளாசித்தள்ள வேண்டும் என்று செம கெத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். அதன் காரணமாக முன்பெல்லாம் கதை கேட்கும்போது ஒரு முத்தக்காட்சியை டைரக்டர்கள் சொன்னால்கூட இந்த மாதிரியெல்லாம் காட்சி தேவையா என்று சொல்லி வெட்கப்படுவாராம். அப்படி சொன்ன ஜி.வி.பிரகாஷ் த்ரிஷா இல்லன்னா நயன்தாராவில் பின்னி பெடலெடுத்திருப்பதைப் பார்த்து இப்போது இன்னும் அதிரடியான கதைகளுடன் அவரை மீட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். அதனால் புல் மூடில் அமர்ந்து கதை கேட்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
மேலும், தனது புரூஸ்லி படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவை அணுகியபோது அவர் நடிக்க மறுத்ததால் பின்னர் ஹன்சிகாவை அணுகினார். ஆனால் எடுத்த எடுப்பிலேயே முடியாது என்று சொன்னால் தவறாக நினைப்பார்கள் என்று சில நாட்கள் இழுத்தடித்த ஹன்சிகாவும், திடீரென்று ஒருநாள் போன் செய்து கால்சீட் இல்லை என்றொரு வழக்கமான காரணத்தை சொல்லி கைவிரித்து விட்டாராம். இதனால் ஹன்சிகாவை மலைபோல் நம்பிக்கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் அதிர்ச்சியடைந்து விட்டாராம். என்றாலும், ஏற்கனவே நயன்தாரா அதிர்ச்சி கொடுத்திருந்ததால் இது அவருக்கு பெரிய ஏமாற்றமாக இல்லையாம். இதையடுத்து வேறு சில மேல்தட்டு ஹீரோயின்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், மற்ற மொழிகளில் பிரபலமான நடிகைகளை தமிழுக்கு கொண்டு வரும் இன்னொரு முயற்சியிலும் இறங்கியிருக்கிறாராம்.