Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாடகத் தயாரிப்பில் ஆர்வம் காட்டும் ராமநாராயணன் மருமகள்

05 அக், 2015 - 15:35 IST
எழுத்தின் அளவு:
Ramanarayanans-daughter-in-law-interested-in-Drama

தமிழ் சினிமாவில் அதிக படங்களை இயக்கியவர் ராம.நாராயணன். தனது தேனாண்டாள் பிலிம்ஸ் மூலம் 70க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன் என்.ராமசாமி தேனாண்டாள் பிலிம்சை நிர்வகித்து வருகிறார். சமீபகாலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தும், வாங்கி விநியோகித்தும் முன்னணி தயாரிப்பாளராக உள்ளார். தற்போதும் ருத்ரமாதேவி, அரண்மணை 2 படங்கள் அவர் கைவசம் உள்ளது.


ஆனால் ராமசாமியின் மனைவி ஹேமா இந்திராணிக்கு நாடகத்தின் மீது அலாதி ஆர்வம். சமீபத்தில் சில்லு, பட்டணத்தில் பூதம் என்ற இரண்டு நாடகங்களை தயாரித்து அரங்கேற்றினார். சில்லு நாடகத்தை பார்த்த கமலஹாசன் ஹேமாவை பாராட்டி மகிழ்ந்தார். அடுத்தடுத்தும் நல்ல நாடகங்களை தயாரிக்க இருக்கிறார். இதற்காக தேனாண்டாள் தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்க உள்ளார்.


"நம்மை விட திரைப்படத்துறையில் முன்னணியில் இருக்கும் ஹாலிவுட்டில் நாடகத்திற்கு தனி மரியாதை இருக்கிறது. பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள்கூட நாடகத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். இங்கும் அப்படியான ஒரு சூழ்நிலை வரும் சாத்தியகூறுகள் தெரிகிறது. அண்மையில் நடத்தப்பட்ட பொன்னியின் செல்வன் நாடகத்தின் வெற்றி அந்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. நான் வெளிநாட்டில் பார்த்த நாடகத்தின் தொழிலநுட்பத்தோடு இங்கு நாடகத்தை நடத்துகிறேன். மிப்பெரிய டிஜிட்டல் எல்ஈடி திரையில் நாடகத்தின் பின்னணியை கொண்டுவந்தேன். மழை, வெயில், புயல், பூகம்பம் அனைத்தையும் மேடைக்கு கொண்டு வரமுடியும். நாடகத்தை சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். அடுத்த கட்டமாக மற்ற நகரங்களிலும் நடத்த இருக்கிறோம்" என்கிறார் ஹேமா ருக்மணி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in